Wednesday, February 17, 2021

என் உயிர் ஸ்நேகிதிக்கு!!!

 வாழ்வும் வளமும்

அன்பெனக் கண்ணில் ஏந்தி

அகமெங்கும் பாச நிலமாகிய 

நடுநாட்டின் சிவந்த தேவதையே

இச்சுந்தரன் மனமாளும் மீனாட்சி தேவியே

தமிழுக்கும் எழிலுக்கும் உரியவளே

இசையின் லயமாகிய குழந்தையின்   தாய்மையே

இத்தனை வருடமாய்.....உயிர் நட்பாடும்

என்நெஞ்சாங் கூட்டுக்காரியே

உன் பாதக்கொலுசொலி சிணுங்கி ..

செம்மொழி கீதம் இழைத்து

நீ வாழும் நாளெல்லாம் 

குழந்தையின் சிரிப்பாய் 

குமரி வடிவாய்

குணம் மிகுந்த மணியாய்

மாசறு பொன்னாய் 

மங்கள ஒளியாய் 

மகிழ்ச்சியின் ஊற்றாய்

இன்பமே உயிராய்

இனிமையாய் 

கவிதையாய் 

உயிர்மையாய் 

இன்ப மழைநீராய் 

நிம்மதி பருகி

என்னுயிர் இணைத்து

வாழியடி என் ப்ரியசகி நூறாண்டு

என் ஆதி காற்றுக்கு

என் ஆதி ஒளிக்கு

என் உயிர் ஆழியில் ஒளிந்திருக்கும் 

என் உயிர் ஸ்நேகிதிக்கு 

என் அன்பும் முத்தங்களும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்...😍😘😘😘💐🎂🎉🎊

No comments:

Post a Comment