அவள் தினம் !!
எங்கே எனக்கான கவிதை என்றாய்
மனம் பதறியது
ஆம் தொலைத்து தான் விட்டேன் போல
எல்லா இடங்களிலும்
தேடிப் பார்த்துவிட்டேன்
இத்தனைக் காலமும்
பாதுகாத்துவைத்திருந்த
நம் காதல் நிமிடங்களை
எங்கு தொலைத்திருப்பேன்
என்னையே கேட்டுக்கொண்டு
தேடினேன்...
ஆம் தொலைத்து தான் விட்டேன் போல
கவிதை தேடி அலைந்தேன்
கிடைக்கவில்லை
உன் புன்னகை
கிடைத்தது
உன் சேட்டைகள்
கிடைத்தது
இல்லை என் காதல் எங்கே என்றாய்
மீண்டும் தேடினேன்
சொல்லவில்லை யாரும்
அச்சமாக இருந்தது
தொலைத்து தான் விட்டேன்னா?
இல்லை
என் காதல்
இன்னும் ஒரு
தளிரை போல
பிறந்த குழந்தை போல
திறக்காத புத்தகத்தின் வாசத்தை போல
அணையா விளக்கை போல
என்னுள் பத்திரமாக
பூட்டி தான் வைத்திருக்கிறேன்
கவிதை கேட்ட
உனக்கு
இந்த கவிதையோடு
என் காதலையும்
பரிசாக
உனக்களிக்க
காத்திருக்கிறேன்!
என்னவளுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்!!
-ப்ரியன்