Saturday, April 26, 2014

என்னவளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... :)

என்னவளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... :)

இங்கு நான் என் கவிதை படைக்க வரவில்லை...
மாறாக என் கண்ணீர் சிந்த வந்திருக்கிறேன்...
எனக்கும் தெரியும் கவிதையை விட நம் கண்ணீருக்கு விலை அதிகம்..
காதல் என்ற அத்தியாயத்தில் கவிதை ஒரு பாதி என்றால் அதில் கண்ணீர் தான் மீதி...
அது ஆனந்த கண்ணீராக இருக்கலாம்...நம் கண்ணீரோ காத்திருப்பின் கண்ணீர்...
காத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது என்று சொல்லும் அனைத்து கவிங்கர்களுக்கும் தெரியும் அது மிகபெரிய ஒரு பொய் என்று...

காதலிக்கும் போது செய்கிற சத்தியம் அனைத்தும் கல்யாணம் நடந்தேறிய அடுத்த கணத்தில் மறப்பது தான் இந்நாள் காதலின் மகத்துவம்...
அதை செய்த நானும் ஒரு சராசரி மனித அரசியல்வாதி என்பதை அறிந்து வெட்கி தலை குனிகிறேன்..

நேரம் மிகவும் பொன்னானது என்று மறைந்த என் தகப்பன் சொல்லியும் கேட்கவில்லை தினம் பாடும் என் தாய் சொல்லியும் கேட்கவில்லை படிக்கும் காலத்தில் நரை விழுந்த என் தமிழம்மா சொல்லியும் மதிக்கவில்லை...

ஆனால் இன்று நீ இல்லாத இந்த ஓவவ்வறு நொடியும் ஓவவ்வறு நாளும் வீணாகும் போது...காலத்தின் அருமை பின்னந்தலையில் தினமும் ஓங்கி அடித்து கொண்டே இருக்கிறது...

மன்னிப்பு... இது இல்லை என்றால் உலக அமைதி என்ற சொல்லே பிறந்திருக்க வாய்ப்பில்லை... எந்த நேரத்தில் விருமன் அந்த வசனத்தை சொன்னானோ அது என் வாழ்வில் வெறும் வசனமாக இல்லாமல் நம் உறவை காக்கும் இறைவாக்காகவே உள்ளது...

என்னை மட்டும் நம்பி உன் வாழ்வை என்னிடம் ஒப்படைத்த நீ... நான் தினம் வணங்கும் என் தாயினும் மேலானவள்... இன்று வரை நான் உன் பிரியங்களை என்னிடம் பிரித்து காட்ட எந்த ஒரு அவகாசமும் அமைத்து கொடுக்க தவறி  விட்டேன்... இவை அனைத்திற்கும் காரணம் நான் என்பதால் இன்று வரை மன்னிப்பை தவிர உன்னிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியவில்லை...

ஆம் மன்னிக்க தெரிந்த நீயும் ஒரு பெரிய மனுஷி தான்...
நானும் ஒரு  பெரிய மனுஷன் தான் தினம் ஒருமுறையாவது உன்னிடம் மன்னிப்பு கோருவதால்...

இந்த பிறந்த நாள் பரிசாக உனக்கு நான் என்ன பரிசு குடுத்தாலும், என்ன கவிதை எழுதினாலும், என்ன அற்புதம் செய்தாலும் உன்னை திருப்தி படுத்த முடியாது என்பதை நான் அறிவேன்... அதை கூட அறியவில்லை என்றால்....... என் கொடும்பாவியை கொளுத்தாமல்... என்னையே நேரடியாக தீக்கு இரையாக்கலாம் ...

ஆதலால் உனக்கு நான் கவிதை எழுத போவது இல்லை, பரிசு கொடுக்க போவதில்லை, எந்த அற்புதமும் செய்ய போவதில்லை,
அதர்க்கு பதிலாக ஒரு காதலன் செய்யும் சத்தியமாக இல்லாமல் உன்னில் ஒரு பாதியான நான் உனக்கு ஒரு சத்தியம் செய்து தருகிறேன்...

என்றும் உன் கண்ணீர் துடைத்து, பிரிவை விலக்கி, சோகம் நீக்கி, துயர் துடைத்து,  தனிமை தவிர்த்து, கைகள் கோர்த்து, விழிகள் பார்த்து, காதல் பொங்கி, கலவி செய்து, 
நன் சிவனாகவும்  நீ என் பார்வதியாகவும் கண் மூடும் வரை உன் அருகில் இருந்து மடிவேன் என் உயிரே!!!......

--°ღ•ப்ரியன்°ღ•





Friday, April 25, 2014

நண்பர்கள் தின வாழ்த்துகள்... :-) :-) :-)

Happy Friendship Day....to All..!!...
அரைகால் டவுசெர்... குட்டியுண்டு பட்டன் டை காலத்திருந்தே...
சுவற்றில் ஒன்றாய் ஒன்றுக்கு போய்... பெஞ்சில் பென்சில் வைத்து...
கணக்கு வாத்தியார் சட்டையில் இன்க் தொழித்து...
சரவணனுக்கும் மாலினிக்கும் பொம்மை கல்யாணம் நடத்தி...
சர்ச் லைட்டை கிரிகட் விளையாடி உடைத்து...
ஹிந்தி இல்லாத ஸ்கூல் கண்டுபிடித்து...
குப்பைமேட்டு இஸ்கூலுக்கு நண்பன் பின்னே சென்று...
டவுசரில் இருந்து பேண்டுக்கு மாறி... 
சைக்கிளில் இருந்து அரசு பேருந்தில் தொங்கி...
தமிழோடு புதிய தமிழாக அனைத்து பசுமையான வார்த்தைகளையும் கற்று...
முளைக்காத மீசையை முறுக்கி...
பெண்கள் பள்ளி பேரழகிகளின் கண்ணில் கெமிஸ்ட்ரி தேடி அலைந்து...
பிஸிக்ஸில் பெயிலாகி...
அப்பா எப்பவும் போல பையனுக்கு உடம்பு சரில்லன்னு சொல்றதும்...
வாத்தியார் பதிலுக்கு அவிங்க குருப்பே சரில்லைன்னு சொல்றதும்...
என்ன மாப்ள ஒழுங்கா படிசுர்க்கலாம்னு பரிச்சைக்கு முதல் நாள் சொல்வதும்...
பரீட்சை முடிந்தவுடன்... மாப்ள நானும் பெயில் நீயும் பெய்லான்னு நிம்மதி அடைவதும்...
இப்படி... திக்கிமுக்கி பள்ளி முடித்து
திசைக்கொன்றாய் சிதறியபின்னும்
வாழ்க்கையை எப்போதும்
அழகான நினைவுகளால்
நிரப்பி நெஞ்சோடு கலந்திருக்கும்...
அக்காலம் முதல் இக்காலம் வரை 
என்னை வருடத்தில் ஒரு நிமிடமாவது நினைத்த :) ... நினைக்க மறந்த நண்பர்களுக்கும்... :(
நண்பர்கள் தின வாழ்த்துகள்...  
--°ღ•ப்ரியன்°ღ•

Monday, April 7, 2014

உன் காதல் வரிகளுக்கு...!


உன் காதல் வரிகளுக்கு...!

வருடத்தில் ஒரு நாள்..
பொதுவான திருநாளாக இல்லாமல்..
எனக்காக பிறர் வாழ்த்தும் நாள்..
இந்த நாள் நீ இல்லாமல்..
இனிதே முடியும் என்று என்னவில்லை..
இருந்தும் முடிந்தது அதே வாழ்த்துக்களோடும்..
சற்றும் எதிர்பார்க்காத உன் காதல் வரிகளோடும்!!..

நீளும் உன் நினைவுகளின் தூரத்தில்..
நீ இன்றி நன் வாழ்வதும்..
உயிர் இன்றி இந்த உடல் மண்ணில்..
வீழ்வதும் ஒன்றே..!!

கட்டி அணைக்க இயலாத எழுத்துகளிலும்..
மறைத்து வைக்க முடியாத பிரிவின் ஏக்கத்திலும்..
மெல்ல மெய்மறந்து உறங்கி போகிறேன்..
உன் வரிகள் தீண்டிய மயக்கத்தில்..
காதல் உண்டவனாக!!..

வருடம் பல சென்றாலும்..
முகத்தில் வரிகளோடும்..
மூக்கு கன்னாடியோடும்..
கை தடியோடும்..
என்றும் அதே காதலோடு..
காத்திருப்பேன்..
உன் காதல் வரிகளுக்கு!!...


- °ღ•ப்ரியன்°ღ•

Sunday, April 6, 2014

கை ரேகை திருநாள்...(11-02-2011)

கை ரேகை திருநாள்...(11-02-2011)

இன்று என்னவள் என் கன்னத்தில் அவள் ரேகை பதித்த அற்புத திருநாள்....
என் கன்னம் சுமக்கும் உன் கை விரல் ரேகைகள்..
என்றும் உன் நினைவுகள் சுமக்கும் என் இதயம்...
என நீள்கிறது நம் காதல் உதிர்த்த இந்த கடற்கரை காட்சிகள்..
இன்னும் என்னுள் கரை தொடாத அலைகளென...
கனக்கிறது கைரேகை முழுவதும் உன் அழியாத நினைவுகளுடன்...
உன்னை பற்றிய இந்த நினைவுகள் நீண்டு போகட்டும் ...
நம்மை பற்றிய கனவுகள் தினம் புதிதாய் மலரட்டும்...
நரைத்து போயினும் உன்னை ரசித்திருப்பேன்...
என் உயிர் மறைந்து போயினும் உன் நினைவுகள் சுமந்திருப்பேன்... 

- °ღ•ப்ரியன்°ღ•