Sunday, April 6, 2014

கை ரேகை திருநாள்...(11-02-2011)

கை ரேகை திருநாள்...(11-02-2011)

இன்று என்னவள் என் கன்னத்தில் அவள் ரேகை பதித்த அற்புத திருநாள்....
என் கன்னம் சுமக்கும் உன் கை விரல் ரேகைகள்..
என்றும் உன் நினைவுகள் சுமக்கும் என் இதயம்...
என நீள்கிறது நம் காதல் உதிர்த்த இந்த கடற்கரை காட்சிகள்..
இன்னும் என்னுள் கரை தொடாத அலைகளென...
கனக்கிறது கைரேகை முழுவதும் உன் அழியாத நினைவுகளுடன்...
உன்னை பற்றிய இந்த நினைவுகள் நீண்டு போகட்டும் ...
நம்மை பற்றிய கனவுகள் தினம் புதிதாய் மலரட்டும்...
நரைத்து போயினும் உன்னை ரசித்திருப்பேன்...
என் உயிர் மறைந்து போயினும் உன் நினைவுகள் சுமந்திருப்பேன்... 

- °ღ•ப்ரியன்°ღ•

No comments:

Post a Comment