உன் காதல் வரிகளுக்கு...!
பொதுவான திருநாளாக இல்லாமல்..
எனக்காக பிறர் வாழ்த்தும் நாள்..
இந்த நாள் நீ இல்லாமல்..
இனிதே முடியும் என்று என்னவில்லை..
இருந்தும் முடிந்தது அதே வாழ்த்துக்களோடும்..
சற்றும் எதிர்பார்க்காத உன் காதல் வரிகளோடும்!!..
நீளும் உன் நினைவுகளின் தூரத்தில்..
நீ இன்றி நன் வாழ்வதும்..
உயிர் இன்றி இந்த உடல் மண்ணில்..
வீழ்வதும் ஒன்றே..!!
கட்டி அணைக்க இயலாத எழுத்துகளிலும்..
மறைத்து வைக்க முடியாத பிரிவின் ஏக்கத்திலும்..
மெல்ல மெய்மறந்து உறங்கி போகிறேன்..
உன் வரிகள் தீண்டிய மயக்கத்தில்..
காதல் உண்டவனாக!!..
வருடம் பல சென்றாலும்..
முகத்தில் வரிகளோடும்..
மூக்கு கன்னாடியோடும்..
கை தடியோடும்..
என்றும் அதே காதலோடு..
காத்திருப்பேன்..
உன் காதல் வரிகளுக்கு!!...
- °ღ•ப்ரியன்°ღ•
No comments:
Post a Comment