Friday, September 25, 2009


பூவைப் போல - உன்
மனசு பூத்திருந்தது
கல்லைப் போல மாற்றி விட்டாய்
ஏன் தெரியல.......!
வாக்குப் போட்ட விதத்தில்
தவறு இருந்ததோ........!
வந்தவனைக் கண்டதும்
என்னை மறந்து விட்டதோ.......!
உன்னைக் கண்டு தாய் நினைவை
மறந்தது விட்டது ஒரு காலம்.
என்னைக் கண்டு நானே வெறுக்கும் நிலை
வந்தது விட்டது மறு காலம்...!!
பெண்ணின் மனம்
அடிக்கடி மாறுவதுண்டா.......?
பெண்ணைப் பெற்ற அன்னை கூட
அடிக்கடி மாற்றுவதுண்டா......?
உன்னை நம்பி இங்கு நான்
வந்தது பாதி.....!
உன்னை எண்ணி உறங்காமல்
தவித்தது பாதி.....!
காதலுக்கு முற்றுப் புள்ளி
வைத்தவள் நீ........ தான்.
கடைசி வரை காத்திருப்பேன்
என வாக்களித்ததும் நீ........ தான்
உன்னை நம்பி........ உன்னை நம்பி........
ஊட்டி விட்டாய் நஞ்சை நெஞ்சில்?!
தேனைப் போல - உன்
வார்த்தை இனிமையானது.
தேளைப் போல மாற்றிவிட்டாய்
ஏன் தெரியல.......!
குறிப்புப் பார்த்த விதத்தில்
தவறு இருந்ததோ.......!
சுளை சுளையாய் பணத்தைக் கண்டதும்
என்னை மறந்து விட்டதோ.......!
உன்னைக் கண்ட நாள் முதல்
உற்று நோக்க வில்லை - வேறு பெண்ணுடல்........
என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன்
வேறு வழி என்ன?
-இப்படிக்கு ப்ரியன்.....

புள்ளி வைக்காத

எழுத்து

அழகு!!...

அதைவிட அழகு

பொட்டு வைக்காத

உன் நெற்றி !!:-)

-இப்படிக்கு ப்ரியன்..

தனிமை பயணம்

என் வாலிப வானம்
அம்மவாசையானது
நிலவு நீ இல்லாமல்!
என் இதய
படகு தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்!
என் இளமை சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்!
என் வாழ்க்கை சாலை
வெறிச்சோடி கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்!
ஆம் !! தொடர்கின்றது
என் தனிமை பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய் !!
-இப்படிக்கு ப்ரியன்!!