Friday, September 25, 2009

தனிமை பயணம்

என் வாலிப வானம்
அம்மவாசையானது
நிலவு நீ இல்லாமல்!
என் இதய
படகு தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்!
என் இளமை சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்!
என் வாழ்க்கை சாலை
வெறிச்சோடி கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்!
ஆம் !! தொடர்கின்றது
என் தனிமை பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய் !!
-இப்படிக்கு ப்ரியன்!!

No comments:

Post a Comment