வாழ்துக்கள்...! இப்படிக்கு பூக்கள்....!
இவள் பூக்களை நேசிப்பவள்...
அவை இவளை நேசிப்பது அறியாமல்...
இவள் மொட்டுகளோடு பேசுபவள்...
அவை இவளிடம் பேசுவது தெரியாமல்...
இவள் சிகை பூக்களுக்காக காத்திருக்கும்...
அவை இவள் சிகை சேர பூத்து நிற்கும்...
இவள் சாமிக்கு பூகோர்த்து மாலையாக்குவாள்
அவை இந்த சாமிக்கு மாலையாக வேண்டி நிற்கும்...
இவள் பூவின் மேல் உள்ள பனித்துளியை ரசிப்பவள்...
அவை பனித்துளி இவளென வியந்து சிலிர்க்கும்...
இவள் தேனீக்களுக்கு முன் தேனை சுவைத்து மகிழ்பவள்...
அவை இவளுக்காக தேனீக்களிடம் இருந்து தேனை மறைத்து சேமித்திருக்கும்...
இவள் பூ உதிர்வதை விரும்பாதவள்...
அவை உதிர்வதே இவள் பாதமலர்க்காக...
என் பூமகளே!
நீ
மலர்ந்தெழுவாய்
மலர்கலாய் பிறந்தெழுவாய்
உன் புன்னகைகொண்டு
பூக்களை வாடாமல்
வாசமாய் நிறைக்கச்செய்வாய்!
என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
-ப்ரியன்
No comments:
Post a Comment